காரைதீவு பிரதேச புதிய சுகாதாரவைத்தியஅதிகாரி தஸ்லிமாவிற்கு பெருவரவேற்பு.



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவுப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றம் பெற்றுவந்த டாக்டர் தஸ்லிமா பஷீருக்கு நேற்று பணிமனையில் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.

காரைதீவுப்பிரதேச சுகாதார வைத்தியப்பணிமனை உத்தியோகத்தர்கள் ஊயர்கள் இணைந்து புதிய அதிகாரியை மாலைசூட்டி வரவேற்றனர். பின்னர் உத்தியோகத்தர்களுக்;கான கூட்டம் இடம்பெற்றது.

கொரோனாகாலகட்டம் என்பதால் மக்களுக்கான சேவையை இரவுபகல் பாராது சுகாதாரத்துறையினர் அர்ப்பணிப்புடன் சேவையாற்றவேண்டியதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

ஏலவே காரைதீவில் பணியாற்றி பின்னர் நிந்தவூருக்கு இடமாற்றாகிச்சென்று அங்கு 8 வருடகாலம் சீரியபணியாற்றி மீண்டும் வருடாந்த இடமாற்றத்திட்டத்தின்கீழ் டாக்டர் தஸ்லிமா காரைதீவுக்கு இடமாற்றலாகிவந்துள்ளார்.
இதேவேளை காரைதீவுப்பிரதேச வைத்திய அதிகாரியாகவிருந்த டாக்டர் எஸ். ஜீவராணி சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு வருடாந்த இடமாற்றத்திட்டததின்கீழ் இடமாற்றம்பெற்று சென்றுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :