காரைதீவுப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றம் பெற்றுவந்த டாக்டர் தஸ்லிமா பஷீருக்கு நேற்று பணிமனையில் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.
காரைதீவுப்பிரதேச சுகாதார வைத்தியப்பணிமனை உத்தியோகத்தர்கள் ஊயர்கள் இணைந்து புதிய அதிகாரியை மாலைசூட்டி வரவேற்றனர். பின்னர் உத்தியோகத்தர்களுக்;கான கூட்டம் இடம்பெற்றது.
கொரோனாகாலகட்டம் என்பதால் மக்களுக்கான சேவையை இரவுபகல் பாராது சுகாதாரத்துறையினர் அர்ப்பணிப்புடன் சேவையாற்றவேண்டியதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.
ஏலவே காரைதீவில் பணியாற்றி பின்னர் நிந்தவூருக்கு இடமாற்றாகிச்சென்று அங்கு 8 வருடகாலம் சீரியபணியாற்றி மீண்டும் வருடாந்த இடமாற்றத்திட்டத்தின்கீழ் டாக்டர் தஸ்லிமா காரைதீவுக்கு இடமாற்றலாகிவந்துள்ளார்.
இதேவேளை காரைதீவுப்பிரதேச வைத்திய அதிகாரியாகவிருந்த டாக்டர் எஸ். ஜீவராணி சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு வருடாந்த இடமாற்றத்திட்டததின்கீழ் இடமாற்றம்பெற்று சென்றுள்ளார்.
0 comments :
Post a Comment