பொலிஸார் இராணுவத்தினருக்கு உதவும் பொதுமக்கள்



பாறுக் ஷிஹான்-
கொரோனா அனர்த்தத்தை கட்டுப்படுத்தும் முகமாக பாதுகாப்பு பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் பொதுமக்களும் அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட செயிலான் வீதியில் இருந்து வாடி வீட்டு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 9 நாளான இன்று(6) குறித்த பிரதேச வீதிகள் சில வெறிச்சோடி காணப்படுவதுடன் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் பொதுமக்கள் உணவு மற்றும் இதர உதவிகளை வழங்கி உள்ளனர்.

கல்முனை பிரதேசத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு கடந்த (28) இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை மேற்குறித்த பகுதிகளில் உள்ள உள்ளக வீதிகள் பிரதான வீதிகளில் போக்குவரத்து செய்வது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய பாதுகாப்பு கடமைகளை பொலிஸார் இராணுவம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :