கிழக்கில் கொரோனாத்தொற்று போட்டிபோட்டு பரவுகிறது!



கிழக்கில் 2115: கல்முனை1090: மட்டக்களப்பு 532: திருமலை 371: அம்பாறை 99.
வி.ரி.சகாதேவராஜா-

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்று போட்டிபோட்டு பரவிவருகிறது. கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுக்களின் எண்ணிக்கை 2100 ஜ தாண்டியுள்ளது.அங்கு (22)வெள்ளிக்கிழமை 2115 ஆகியது. அதேவேளை கல்முனைப்பிராந்தியம் 1000ஜத் தாண்டி 1090 ஆகியது.
கல்முனைப்பிராந்தியத்துள் வரும் அக்கரைப்பற்று பிரதானசந்தை மூலமாக ஏற்பட்ட உபகொத்தணிப்பரவலும்; 1000த்தாண்டியது. அந்த உப கொத்தணியில் இதுவரை 1052பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

பின்னணியில் மட்டக்களப்பும் திருகோணமலையும் யாரை யார் முந்துவது என்ற போர்வையில் தினம் தினம் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

கடந்த 12மணிநேரத்தில் மட்டு. மாவட்டத்தில்; செங்கலடியில் களுவாஞ்சிகுடியில் தலா 4பேரும்; கோறளைப்பற்றில் 2பேரும் ஏறாவுரில் ஒருவரும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தெற்கில் 9பேரும் காரைதீவில் 3பேரும் அட்டாளைச்சேனையில் 2பேரும் சாய்தமருதில்திருமலையில் உப்புவெளியில் ஒருவருமாக 27பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதமிருந்து பேலியகொட மூலமாக இதுவரை கல்முனை பிராந்தியத்தில் 1090பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 532பேரும் திருமலை மாவட்டத்தில் 371 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 99பேருமாக 2092பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

மேலும் வெளிநாடு மினுவாங்கொட கந்தக்காடுகொத்தணி வெலிசற கடற்படைமுகாம் போன்ற மூலங்களிலிருந்து மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.

12மரணங்கள்!

இதுவரை கிழக்கில் சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது அட்டாளைச்சேனை வவுணதீவு காத்தான்குடி நாவிதன்வெளி ஆலையடிவேம்பு உகனை காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பிலுமாக மொத்தம் 12 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
கல்முனைப்பிராந்தியத்தில் 06பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 05பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் ஒருவருமாக இந்த 10 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

இத்தரவுகளை கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இவ்வார உயர் அபாய பிரதேசங்கள்

கிழக்கில் உயர் அபாய பிரதேசங்களாக இவ்வாரம் ஏழு பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கிண்ணியா கல்முனைதெற்கு திருமலை உப்புவெளி காரைதீவு காத்தான்குடி அம்பாறை ஆகிய பிரதேசங்களே அவை.

கல்முனை பிராந்தியத்தில் 1090..

கல்முனைப்பிராந்தியத்தில் 1090ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இப்பிராந்தியத்துள்வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 1052பேர் இனங்;காணப்பட்டுள்ளனர்.

அதில் அக்கரைப்பற்று 312தொற்றுக்கள் அடுத்ததாக கல்முனை தெற்கு 299 அட்டாளைச்சேனை 91 பொத்துவில் 82 சாய்ந்தமருது 67 காரைதீவு 53 ஆலையடிவேம்பு 41 சம்மாந்துறை 34 இறக்காமம் 24 நிந்தவுர் 26 கல்முனைவடக்கு 28 நாவிதன்வெளி 17 திருக்கோவில் 17 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த பல நாட்களாக காரைதீவுப்பிரதேசத்தில் 48ஆக இருந்த தொற்று நேற்று இனங்கண்ட 03பேருடன் 53 ஆக உயர்ந்துள்ளது.

கல்முனை மாநகரில் 395..

அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 395 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது.

கல்முனை தெற்கி;ல் 299பேரும் சாய்ந்தமருதில் 68பேரும் கல்முனை வடக்கில் 28பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக தனியொருபிரிவாக காத்தான்குடியில் 3பேரும் அட்டாளைச்சேனையில் 2பேரும் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனையின் 11 கி.சே.பிரிவுகளில் முடக்கச்செயற்பாடு 18 வது நாளாக அமுலில்உள்ளது.

மட்டக்களப்பில் 532...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 532ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கூடியதாக காத்தான்குடியில் 215 பேரும் கோறளைப்பற்றுமத்தியில் 73 பேரும் ஓட்டமாவடியில் 43பேரும் களுவாஞ்சிக்குடியில் 37பேரும் மட்டக்களப்பில் 52பேரும் ஏறாவூரி;;ல் 30 பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.

திருமலையில் 371...

திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 371ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 148பேரும் கிண்ணியாவில் 81பேரும் மூதூரில் 56பேரும்; உப்புவெளியில் 38பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர்.அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.

அம்பாறையில் 99...

அம்பாறை பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 99ஆக உயர்ந்துள்ளது. அங்கு கூடுதலாக அம்பாறை நகரில் 44பேரும் உகனயில் 29பேரும் தமனையில் 10பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள்99பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 1084பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

52586 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

இதுவரை கிழக்கில் 52586பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள்.
கல்முனைப்பிராந்தியத்தில் 23627 சோதனைகளும் மட்டக்களப்பில் 15117 சோதனைகளும் அம்பாறையில் 4227 சோதனைகளும் திருகோணமலையில் 9615 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

08 சிகிச்சை நிலையங்களில் 3300 அனுமதி

கிழக்கில் இதுவரை 08கொரோனா சிகிச்சை நிலையங்கள் இருக்கின்றன.

கிழக்கிலுள்ள 08 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 555கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (22.01.2021) வரை 3300பேர் மேற்படி 8 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 2730பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.15பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :