பொகவந்தலாவையில் பாடசலை மாணவி உள்ளிட்ட மூவருக்கு தொற்று உறுதி



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
பொது சுகாதர வைத்திய அதிகாரி காரியாலயப்பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பொகவந்தலாவை பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
டிக்கோயா பீரட் தோட்டத்தில் ஒரே குடும்பத்தில் தாயும் புளியாவத்தை பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி பயிலும் 12 வயதுடடைய மகளுமாக இருவரும், பொகவந்தலா நோத்கோ பகுதியில் பெண் 47 வயதுடைய பெண் ஒருவருமாக மூவருக்கே தொற்று உறுதியானது
பீரட் தோட்டத்தில் தொற்றுக்குள்ளான பெண் ( தாய்) கடந்த 28.29.30 ஆம் திகதிகளில் தேயிலை மலையில் சக பெண் தொழிலாளர்களுடன் இணைந்து கொழுந்து பறித்துள்ளமை தெரியவந்துள்ளது.

பீரட் தோட்டத்தில் இதுவரை ஆறு பேர்தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் அறிக்கை 04/01/2021 வெளியாகிய போதே மேற்படி மூவருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது .

மேலும், பீரட் தோட்டத்தில் அம்மன் ஆலயத்தின் பூசகர் ஒருவர் உட்பட 12 குடும்பத்தை சேர்ந்த 44 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை பொகவந்தலா நோத்கோ பகுதியில் தொற்றுக்குள்ளானர் கொழும்பிலிருந்து வந்தவர் என்றும், இவர்களை சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இதுவரையில் 58 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :