பொது சுகாதர வைத்திய அதிகாரி காரியாலயப்பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பொகவந்தலாவை பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
டிக்கோயா பீரட் தோட்டத்தில் ஒரே குடும்பத்தில் தாயும் புளியாவத்தை பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி பயிலும் 12 வயதுடடைய மகளுமாக இருவரும், பொகவந்தலா நோத்கோ பகுதியில் பெண் 47 வயதுடைய பெண் ஒருவருமாக மூவருக்கே தொற்று உறுதியானது
பீரட் தோட்டத்தில் தொற்றுக்குள்ளான பெண் ( தாய்) கடந்த 28.29.30 ஆம் திகதிகளில் தேயிலை மலையில் சக பெண் தொழிலாளர்களுடன் இணைந்து கொழுந்து பறித்துள்ளமை தெரியவந்துள்ளது.
பீரட் தோட்டத்தில் இதுவரை ஆறு பேர்தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் அறிக்கை 04/01/2021 வெளியாகிய போதே மேற்படி மூவருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது .
மேலும், பீரட் தோட்டத்தில் அம்மன் ஆலயத்தின் பூசகர் ஒருவர் உட்பட 12 குடும்பத்தை சேர்ந்த 44 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பொகவந்தலா நோத்கோ பகுதியில் தொற்றுக்குள்ளானர் கொழும்பிலிருந்து வந்தவர் என்றும், இவர்களை சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இதுவரையில் 58 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment