கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் மூன்றாம் கட்ட மணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு



ல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் வருடாவருடம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் முன்றாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு மாணவர்களின் பெற்றோர்களிடம் இப்பாடசாலை கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகளை கல்முனை மாநகர சபை பிரதி மேயரும் கல்முனை ரஹ்மத் பவுன்டேசனின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வு தற்போதைய நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டின் சுகாதாரத்துறையினரின் முழு வழிகாட்டுதலுக்கும் ஏற்ப இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் இந்நிகழ்வை சரிவர நடத்திமுடிக்க பயனாளிகளை தெரிவு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூக சேவை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் விஷேட நன்றியினை ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தலைவர் AM.ஹனீபா (JP) மற்றும் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :