நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
கொரோனாவிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வது எவ்வாறு என்பது தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கை நேற்று 15/01 அட்டன் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது.
அட்டன் பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி பலிபானவின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த விழிப்புனர்வு நடவடிக்கை குறிப்பாக மாணவர்களை மையப்படுத்தியதாக இருந்தது.
இதன்போது துண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஒலி பெருக்கிகள் ஊடாக அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்கள் சுகாதார நடை முறைகளை பின்பற்றுதல் வேண்டும்', பாடசாலை நேரங்களில் கட்டாயமாக முகக் கவசத்தை அணிந்திருப்பது அவசியம். அவ்வாறு முகக் கவசத்தை கழட்டினால் அதனை பாதுகாப்பான இடத்தில் வைத்து பின்னர் பாவிக்க வேண்டும். சமூக இடைவெளிகளை பேண வேண்டும்.
கை கழுவும் நடவடிக்கைகளை அடிக்கடி முன்னெடுத்தல் வேண்டும். போன்ற பல கருத்தான விடயங்களை உள்ளடக்கி துணடு;பிரசுங்கள் விநியோகிக்கப்பட்டன.
தமிழ், சிங்கள மொழிகளிலும் விழிப்புனர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment