டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை தாதிக்கு தொற்று உறுதி



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் பணி புரியும் 07 தாதியர்கள் தமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை 20/01 வெளியானதையடுத்தே நாவலபிட்டியை சேர்ந்த மேற்படி தாதிக்கு தொற்று இருப்பது உறுதித்தானதாக நாவலபிட்டி பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அன்மையில் 07 இலக்க விடுதியில் (வார்ட்டில்) சிகிச்சைப்பெற்று வந்த பெண் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் என 15 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளது .
தொற்றுக்குள்ளான தாதி கொழும்பு ஐ.டி.எய்ச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :