டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் பணி புரியும் 07 தாதியர்கள் தமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை 20/01 வெளியானதையடுத்தே நாவலபிட்டியை சேர்ந்த மேற்படி தாதிக்கு தொற்று இருப்பது உறுதித்தானதாக நாவலபிட்டி பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அன்மையில் 07 இலக்க விடுதியில் (வார்ட்டில்) சிகிச்சைப்பெற்று வந்த பெண் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் என 15 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளது .
தொற்றுக்குள்ளான தாதி கொழும்பு ஐ.டி.எய்ச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்
0 comments :
Post a Comment