காரைதீவு பிரதேச செயலகத்தில் திட்டமிடல்பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக்கடமையாற்றும் கடமையாற்றும் கருணாகரன் உதயகுமார் விபத்தொன்றில் பலியாகிள்ளார்
இச்சம்பவம் தைப்பொங்கலன்று(14) களுதாவளை வீதிப்பிள்ளையார் ஆலயத்தடியில் இடம் பெற்றது.
அந்த விபத்தில் காயமடைந்த ஜந்து பேரில் ஒருவரான க.உதயகுமார் உயிரிழந்துள்ளார்.
மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் நடந்து பயணித்தவர் உட்பட ஐவர் மீது மோதியதுடன் இரண்டு கடைகள்மீதும் மோதியது.
அதில் மேற்படி உயிரிழந்தவர் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கடையில் பழம் வாங்கிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கில் மோதியதால் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரு கடைகளும் சேதத்திற்குள்ளாகிருந்தன.
மேலும் காயமடைந்த நால்வரின் மூவர் பலத்த காயங்களுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் ஒருவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment