தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் இணைப்பாளர்களுக்கான விசேட செயலமர்வு
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் இணைப்பாளர்களுக்கான விசேட செயலமர்வு
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் இணைப்பாளர்களுக்கான விசேட செயலமர்வு ஒன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹற்றன் தலைமை பணிமனையில் இடம்பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. பழனி திகாம்பரம் அவர்களின் ஆலோசனைக்கேற்ப இடம் பெற்ற இந்தச் செயலமர்வில் சாமிமலை ,மஸ்கெலியா, நோர்வூட், டிக்கோயா ,புளியாவத்தை, வட்டவளை, நாவலப்பிட்டிய, ராகலை, உடபுசல்லாவை ,அக்கரப்பத்தனை, ஹற்றன் ஆகிய பிரதேசங்களின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் இணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் வளர்ச்சிக்கு மகளிரின் பங்களிப்பு என்ற தொனிப்பொருளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
அத்துடன் மகளிர் இணைப்பாளர்களின் மாதாந்த செயற்பாடுகளைப் பதிவு செய்வதற்கான கோவைகளும் வழங்கப்பட்டன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தச் செயலமர்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் ,பிரதி பொதுச் செயலாளர் பி. கல்யாணகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment