சாய்ந்தமருதைச் சேர்ந்த சிப்லி இராணுவ கடேட் படையணியின் லெப்டினென் பதவியிலிருந்து கெப்டனாக பதவியுயர்வு!



நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எஸ்.சிப்லி இராணுவ கடேட் படையணியின் லெப்டினென் பதவியிலிருந்து கெப்டனாக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
இவரது பதவி உயர்வுக்குரிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த 2021.01.08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியானது. இவர் பாதுகாப்பு அமைச்சில் 05 வருடங்கள் கடமையாற்றியதுடன் தற்போது முல்லைத்தீவு 34ம் படையணியின் நிறைவேற்று நிர்வாக அதிகாரியாகவும் கடமையாற்றி வருகின்றார்.

இவர் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராகவும், ஒழுக்காற்றுக்கு பொறுப்பான ஆசிரியராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. சாய்தமருதைச் சேர்ந்த பிரபல மெளலவி காலஞ்சென்ற அல்-ஹாஜ் ஏ.எஸ்.எம்.சம்சுதீன் அவர்களின் நான்காவது புதல்வராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :