இலங்கை வந்த நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இதன் காரணமாக இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இவரால் விளையாட முடியாமல் போயிருந்தது.
இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலயங்களில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிசிஆர் பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் அவரை இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment