அட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அட்டனில் இடம்பெற்றுள்ளது .
அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயான 72 வயதுடைய எஸ் மாரியம்மா என்பவரே 13/01/2021 இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அட்டனிலிருந்து நாவலப்பிட்டி சென்ற இரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அட்டன் சிரேஸ்ட மரண பரிசோதகர் ஏ.ஜே.எம். பஷீர் முகமஹட் தெரிவித்தார் .
அட்டன் இரயில் நிலையத்திற்கும் ரொசல்ல இரயில் நிலையத்திற்கும் இடையிலான மல்லியப்பு பகுதியிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்த அட்டன் பொலிஸார் சிதறிக்கிடந்த உடற் பாகங்களை டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்தனர்
0 comments :
Post a Comment