இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின் போது - முஸ்லிம் தரப்புடனான சந்திப்பு இடம்பெறவில்லை.
இலங்கையில் - முஸ்லிம் சமுகம் , ஜனாஸா எரிப்பு தடைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இன்றைய நிலையில் , ஜெய்சங்கரின் விஜயம் முக்கியத்துவமிக்கதாகும்.
முஸ்லிம் கட்சிகளான முகா - மகா - ஜெய்சங்கரை , தனித்தோ அல்லது கூட்டாகவோ சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அது இடம்பெறவில்லை.
டக்ளஸ் - மனோ கணேசன் மற்றும் வியாழேந்திரனையையும் சந்தித்தார் - இந்திய வெளிவிவகார அமைச்சர்.
முஸ்லிம் தரப்பை அவர் சந்திக்காமை குறித்து தேடிப்பார்த்த வேளை , சந்திப்புக்காக - ஹக்கீம் முயற்சி மேற்கொள்ளவில்லை அல்லது நேரம் ஒதுக்கி கேட்கவில்லை என்று தெரியவந்தது.
ரிஷாத் பதியுதீனின் - சந்திப்புக்கான கோரிக்கை இராஜதந்திர ரீதியில் தவிர்க்கப்பட்டது என உறுதியாக அறிய முடிந்தது.
முஸ்லிம் சமுகம் - இன்று பெரும் துயரத்திற்குள் சிக்கித் தவிக்கும் இத் தருணத்தில் , முஸ்லிம்களின் ஏக தலைவன் நான்தான் என்று கூறிக்கொள்ளும் ஹக்கீம் , ஜெய்சங்கரை சந்திக்க - கிஞ்சித்தும் முயற்சிக்காமை வேதனைக்குரிய விடயமாகும்.
கொரோனா ஜனாஸா எரிப்பு விவகாரம் மற்றும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை விடும் ஹக்கீமுக்கு - ஜெய்சங்கரின் விஜயத்தை அரிய வாய்ப்பாக பயன்படுத்தி இருக்கலாம்.
இலங்கை முஸ்லிம்களின் மனோநிலையை எடுத்துக் கூறி அழுத்தம் ஒன்றை அல்லது இலங்கை அரசிடம் பேசுமாறு கூறுவதற்காவது இந்த சந்திப்பை பயன்படுத்தி இருக்கலாம்.
0 comments :
Post a Comment