கவிதை போட்டி பரிசளிப்பும் நூல்கள் கையளிப்பும்.

பு
திய அலை கலை வட்டம் நடத்திவரும் எவோட்ஸ் 2021 கலை,கலாசாரப் போட்டி தொடரின் கவிதைப்போட்டி இம்மாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்புவிழா மேற்படி அமைப்பின் ஸ்தாபகதினமான எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கொழும்பு 15 இலக்கம் 582 அளுத்மாவத்தை வீதியில் அமைந்துள்ள கிளாரட் கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக புரவலர் பூங்கா நிறுவனர் ஹாசிம்உமர் பிரதம அதியாக பங்கேற்கிறார். சிறப்பு அதிதிகளாக நெய்னார் சமூகநல காப்பக தலைவர் இம்ரான் நெய்னார், அஸிஸ் மன்றத் தலை வர் அஷ்ரப் அஸிஸ் மற்றும் கலை,இலக்கிய, ஊடகத்துறையை சார்ந்த முக்கியஸ் தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இப்போட்டியில் முதலாம் இடத்தை எம்.நிரோஷனும் இரண்டாம் இடத்தை எச்.எவ். றிஸ்னாவும் மூன்றாம் இடத்தை ஆர்.சுவஸ்திகாவும் பெற்றுள்ளனர்.இவர்களுக்கு ரூபா 5000,3000,2000 பணப்பரிசில்களும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

இந்த நிகழ்வின் சிறப்பு அம்சமாக மலையகத்தில் ‘ஊருக்கொரு நூலகம் அமைப் போம்’ என்ற செயல் திட்டத்தை வழிநடத்திவரும் மலையக மறுமலர்ச்சி ஒன்றியத் துக்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :