நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
ஆத்திரமுற்றுகுப்பையைவீதியில்கொட்டியசெல்வகந்தைதோட்டமக்கள்பொகவந்தலா , செல்வகந்தை தோட்டப் பகுதி மக்கள் ஸ்ரீபுர மற்றும் ஆரியபுர வீதியில் குப்பைகளை கொட்டியுள்ளதால் இப்பகுதி வீதியில் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செல்வகந்தை தோட்டப் பகுதியில், தேயிலை மலை ஓரங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையிலும் நோர்வூட் பிரதேசசபைக்குற்பட்ட ஸ்ரீபுர மற்றும் ஆரியபுர பகுதி குடியிருப்பாளர்கள் குப்பைகளைக் கொட்டுவதானால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதாகவும் இதனால், அசௌகரியத்திற்குள்ளாவதாகவும் கடந்தவாரம் செல்வகந்தை தோட்ட குடியிருப்பாளர்கள் குற்றஞ்சுமத்தி இருந்தனர்.
குறித்த பகுதியிலுள்ள கழிவுகள் பிரதேசசபையினூடாக முறையாக சேகரிக்கப்படுவதாகவும் கழிவுகளை பிரித்து வகைப்படுத்தாத கழிவுகளை எடுப்பதில்லை எனவும் நோர்வூட் பிரதேசசபை செயலாளர் கே.முரளிதரன் அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான கழிவுகளையே தேயிலை மலைப்பகுதிகளில் சிரிபுர மற்றும் ஆரியபுர குடியிருப்பாளர்கள் வீசுகின்றதை எதிர்த்து ஆத்திரமுற்ற செல்கந்தை தோட்ட மக்கள் குறித்த குப்பைகள் ஸ்ரீபுர ஆரியபுர பிரதான வீதியில் கொட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment