அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் புனரமைப்பு !



நூருல் ஹுதா உமர்-
தேசிய இளைஞர் கழக சம்மேளத்தின் கீழுள்ள அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளன நிர்வாக தெரிவுப் புனரமைப்பு கூட்டம் அக்கரைப்பற்று பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம். ஸமீலுல் இலாஹியின் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.கே. றொசின்தாஜ் மற்றும் அதிதிகளாக அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ. முபாரக் அலி, அக்கரைப்பற்று திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.றுமைஸா, அக்கரைப்பற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பியோத் முஹைமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது 2021 ஆம் ஆண்டுக்கான 21 பேர் கொண்ட நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதுடன் அதன் தலைவராக கடந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட ஆர்.கே.எஸ். ஊடக வலையமைப்பின் பிரதானி எம்.எம்.றுக்சான் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :