அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளராக அச்சுதன் கடமையேற்பு!



நூருல் ஹுதா உமர்-
ம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் மாவட்ட பிரதம பொறியியலாளராக நியமிக்கப்பட்ட பி.அச்சுதன் வெள்ளிக்கிழமை (15) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் மாகாண பொறியியலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் கல்முனையிலுள்ள அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்கள காரியாலயத்திற்கு இடமாற்றப் பட்டிருக்கிறார்.

பொறியியல் சேவையில் சுமார் 12 வருட கால அனுபவத்தைக் கொண்ட பட்டயப் பொறியியலாளரான இவர் மட்டக்களப்பு மாநகர சபையின் பொறியியலாளராகவும் அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் மாவட்ட நிறைவேற்று பொறியியலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் மாவட்ட பிரதம பொறியியலாளராக கடமையாற்றிய ஏ.எம்.சாஹிர் வருடாந்த இடமாற்றம் பெற்று கல்முனை கல்வி மாவட்ட பணிமனையின் பொறியியலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :