தேசிய காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களின் நிதியொதுக்கீட்டில், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி, இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எல்.சலீம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் மாவடிப்பள்ளி,சாய்ந்தமருது, கல்முனை குளக்கட்டு வீதியை (Bund Road) காபட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம் விரைவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
மாவடிப்பள்ளி துவக்கம் கல்முனை வரையிலான இந்த 5 கிலோ மீட்டர் காபட் வீதி அபிவிருத்திக்கான பூர்வாங்க Estimate மற்றும் வரைபு திட்டப் பணிகள் வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் மற்றும் ஊழியர்களால் நடைபெற்று வருகின்றன.
இதே வேளை, ஏ.எல்.எம். சலீம் அவர்களின் கோரிக்கைக்கு அமைய சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் மிக நீண்ட காலமாய் சீரமைக்க படாமல் இருக்கும் 4 KM வீதிகளும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment