இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 73 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகம் ஊடாகவும் சுதந்திர தின வைபவம் இன்று (04) இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் மரநடுகை வைபவமும் இடம் பெற்றது. இதில் கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியில் நூற்றுக்கும் அதிகமான மரக்கன்றுகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் இடம் பெற்றதோடு சமூக சேவைகள் பிரிவின் மூலமாக விசேட தேவையுடையோர்களும் கலந்து கொண்டதோடு மரங்களை நட்டு வைத்தார்கள். தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் வளாகத்திலும் டாக்டர் ஜீவராஜ் அவர்களின் பங்குபற்றலோடும் மரக் கன்றுகள் நடப்பட்டன. விசேடமாக இளைஞர் யுவதிகளூம் குறித்த பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் இணைந்து தேசிய கொடியை ஏந்தியவாறு மரங்களை நட்டு வைத்ததுடன் வீதி ஊர்வலத்திலும் ஈடுபட்டார்கள்.
இவ் நிகழ்வில் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் பி.சுதன் உட்பட பல உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
0 comments :
Post a Comment