திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வலது குறைந்த மற்றும் அங்கவீனமானவர்களுக்காக சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு இன்று(1) கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஏ சி எம் ஜவாஹிரின் ஏற்பாட்டில் கந்தளாய் பிரதேச சபையின் வளாகத்தில் நடைபெற்றது.
அல் ஹிக்மா பவுண்டேசன் அமைப்பினால் சக்கர நாற்காழிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கந்தளாயிலுள்ள பேராறு,பேராற்றுவெளி,மற்றும் ரஜஎல போன்ற பகுதிகளிலுள்ள முப்பத்தைற்றிற்கும் மேற்பட்ட அங்கவீனமானவர்களுக்கு வழங்கிவைக்கபட்டன.
இதனை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அதுகொரல, பிரதேச சபை தவிசாளர் சமன் எகநாயக அல் ஹிக்மா பவுன்டேசனின் பணிப்பாளர் அல்ஹாஜ் இபாதுல்லா மௌலவி ஆகியோர் கலந்து கொண்டு சக்கர நாற்காழிகளை வழங்கி வைத்தார்கள்.
0 comments :
Post a Comment