வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

நூருள் ஹுதா உமர்-

சாய்ந்தமருது இபாட் மகளிர் அமைப்பினால் வசதி குறைத்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அமைப்பின் தலைவி ஜே. எல். ஜசீமாவின் தலைமையில் சாய்ந்தமருது கமு/கமு/ எம்.எஸ். காரியாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக் கலந்து கொண்டு புத்தக பை மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் மேலும்
சாய்ந்தமருது பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். அப்துல் வக்கில், சாய்ந்தமருது 16ம் பிரிவின் கிராம சேவகர் எம்.எல். அஜ்ஹர், ரெட் சில்லி நிறுவினர், அமைப்பின் செயலாளர் எஸ்.ஏ. ரோஷான், பொருளாளர் எம்.எச். பஸ்மியா உட்பட மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :