வாழைச்சேனை சக்ஸஷ் எகடமியின் முன்பள்ளி மாணவர்களுக்கான முதல் நாள் அனுமதி நிகழ்வு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை சக்ஸஷ் எகடமியின் முன்பள்ளி மாணவர்களுக்கான முதல் நாள் அனுமதி நிகழ்வு (01.02.2021) நேற்று சக்ஸஷ் எகடமியில் இடம்பெற்றது.

தமிழ், முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் சக்ஸஷ் எகடமியின் முன்பள்ளியில் யூ.கே.ஜி, எல்.கே.ஜி, பிளே குறூப் ஆகிய வகுப்புகளுக்கு இவ்வருடம் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பிள்ளைநேய முன்பள்ளியாக இது அமையவேண்டும் எனும் நோக்கில் முதல் நாள் நிகழ்வு விமர்சையாக இடம்பெற்றது.

தலைமை ஆசிரியையினால் இலட்சினை சூட்டி மாணவர்கள் தனித்தனியாக வரவேட்கப்பட்டனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்று புதிய மாணவரால் நடப்பட்டது. பாடசாலைக்கு பிள்ளையை தயார்படுத்தல் (get ready for school) எனும் விளையாட்டு நிகழ்வில் தந்தையர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களை மகிழ்விக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. மாணவர்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு நூல் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

முதல் நாள் முன்பள்ளியை ஞாபகங் கொள்ளும் வகையில் புகைப்பட கூடம் ஒன்றும் இதன்போது அமைக்கப்பட்டிருந்தது விசேட அம்சமாகும்.
முன்பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத் சாத்ரக், ஆசிரியைகளாக திருமதி. அஸ்வர் நஸ்மிலா, எம்.பி.பிர்தௌசியா ஆகியோர் இந்நிகழ்வினை நெறிப்படுத்தினர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :