கொந்தராத்துக்கும், கொள்ளையடிக்கவும், மாணவர்களை வழிகெடுக்கவும் கழகம் ஆரம்பிக்கவில்லை- அல்நஜா இத்ரீஸ்

கொ
ந்தராத்து செய்வதற்கோ, கொள்ளையடிப்பதற்காகவோ அல்லது மாணவர்களின் கல்வியை சீரளித்து இளைஞர்களைக் காட்டி ஒரு சிலர் அரசியல்வாதிகளிடம் பணம் பறித்து வாழ்வதுபோன்று நாங்கள் கழகம் ஆரம்பிக்கவில்லை, எங்களுடைய நோக்கம் எல்லாம் விளையாட்டின் மூலம் நல்லதொரு இளைஞர் சமூகத்தை உருவாக்கி விளையாட்டுக்கழகம் என்றால் விளையாடுவது மாத்திரம் அல்ல சமூகப்பணி என்ற ஒரு உன்னதமான பணியும் இருக்கிறது அதனையும் செய்யவே அல்-நஜா கழகத்தினை ஆரம்பித்தோம் என அக்கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் தெரிவித்துள்ளார்.

அல்-நஜா விளையாட்டுக்கழகத்தின் நிருவாக சபைக்கூட்டம் அக்கரைப்பற்று மென்கோ கார்டனில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அல்-நஜா கழகம் யாரையும் திருப்திப்படுத்தவோ அல்லது கொள்ளையடிப்பதற்கோ ஆரம்பிக்கவில்லை. அதனை நன்னோக்கத்தின் அடிப்படையிலே ஆரம்பித்தோம். அக்கழகத்தின் ஸ்தாபகர்கள் என்ன நோக்கத்தின் அடிப்படையில் அதனை ஆரம்பித்தார்களோ அதனை ஒவ்வொன்றாக செய்து வருகின்றோம்.

இந்தக்கழகத்தினை வைத்து ஒருபோதும் கொந்தராத்து செய்யவோ அல்லது கொள்ளையடிக்கவோ மாட்டேன். அதனை யார் செய்வதற்கு முற்பாட்டாலும் அனுமதிக்கவுமாட்டோம்.

இன்று கழகங்களை வைத்துகொண்டு பிழைப்பு நடாத்துகின்றார்கள். அதனை நீங்கள் அறிவீர்கள். அப்படியானவர்களை எமது வீரர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். அவர்கள் செல்லும் இடமெல்லாம் கழகங்களும் சங்கங்களும் ஆரம்பித்து வசூல் செய்வதையே பழக்கமாக்கி கொண்டுள்ளனர். ஆனால் எமது கழகத்தில் உள்ள வெளிப்படைத்தன்மையுடன் ஒற்றுமை மற்றும் உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்கள் என்பற்றினாலே நாம் அதிகமான பணிகளை செய்தோம் இன்னும் செய்து கொண்டிருக்கிறோம்.

அல்-நஜா கழகம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அதன் ஸ்தாபகர்கள், கழக உறுப்பினர்கள் மற்றும் தனவந்தர்களின் ஒத்துழைப்புடன் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிகமான பணிகளை செய்துதள்ளோம். எதிர்வரும் காலங்களில் இதனை விட அதிகமாக பணி செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :