வாழைச்சேனையில் டெங்கொழிப்பு நடவடிக்கை

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

கோ
றளைப்பற்று மத்தி, வாழைச்சேனைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாழைச்சேனை 206B கிராம சேவகர் பிரிவில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலும், அடையாளங் காணப்பட்ட பொருட்களை அகற்றுதலும் பணிகள் கிராம உத்தியோகத்தர் ஜனாபா ஜெஸ்மிலா பானு தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சீ.எம்.எஸ்.இஸ்மாயில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாபா எப்.முஜீபா, வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஏ.எல்.லியாப்தீன் JP மற்றும் இக்பால் சனசமூக நிலையத்தின் செயளாலர் ஏ.எம்.சுபியான், உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :