கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், கல்முனை பிராந்தியத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.யூ. தாஹா செய்னுதீன் நேற்று முன்தினம் கொழும்பில் காலமானார். அதற்கமைய கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் அவருக்குறிய ஜனாஸா தொழுகை இன்று (07) மதியம் 01 மணியளவில் இடம்பெற்றது
கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் ஸாரிக் காரியப்பரின் தலைமையில் நடைபெற்ற இந்த ஜனாஸா தொழுகையில் உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கிப், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எம். ஜெமீல், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை சட்டத்தரணிகள் ,சங்க முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சட்டத்துறை சேவையில் 50 வருடங்களை பூர்த்தி செய்தமைக்காக சட்டத்தரணிகள் சங்கத்தினால் அன்னாரை பாராட்டி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அன்னாரின் நினைவாகவும், நாட்டின் சுபிட்சம் வேண்டியும் விசேட துஆ பிராத்தனையும் இங்கு நடைபெற்றது.
0 comments :
Post a Comment