இவ்வாறு - அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி அமைப்பாளரும் - தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளருமான சித்தீக் நதீர் குறிப்பிட்டுள்ளார்.
190 நாடுகளில் அடக்கம் செய்யப்படும் போது , இலங்கை அரசு - ஜனாஸாவை எரிப்பதில் அதீத ஆர்வம் செலுத்திவருவது முஸ்லிம் சமுகத்தை திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்குவது முதற்கொண்டு - பள்ளிவாசல்களை உடைத்து - ஹபாயாவில் கைவைத்து , இன்று முஸ்லிம்களின் உடல்களை எரிக்கும் நிலைக்கு இந்த அரசாங்கம் வந்திருக்கிறது என்றால் - நிச்சயமாக - இன்றைய அரசைப் போன்ற அராஜகம் கொண்ட அரசாங்கம் வேறு எங்குமே இருக்க முடியாது.
கொரோனாவை காரணம் - முடக்க நிலையை உருவாக்கி , வியாபார நிலையங்களை முக்கியமான தருணங்களில் மூடி அராஜகம் காட்டிய இந்த அரசு - பாரிய பொருளாதார வீழ்ச்சியை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி உள்ளது என்பதை வியாபார துறையில் ஈடுபாடு கொண்ட என்னால் உறுதியாக கூற முடியும்..
எமது - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் - ஆரம்பம் முதலே இந்த ஜனாஸா எரிப்பு விவகாரத்தை எதிர்த்து வருகின்றார்.. சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதும் - துணிச்சலான முறையில் இதற்கெதிராக குரல் கொடுத்தார். இதன் எதிரொலியாக - அரசின் , அராஜகம் நிறைந்த 20 வது திருத்தத்தை எதிர்த்தார்.
கட்டாய ஜனாஸா எரிப்பு - நிறுத்தப்படும் வரை தலைவர் ரிஷாத் பதியுதீனின் வழிகாட்டலில் எமது எதிர்ப்பு கோஷம் தொடரும் என்றும் சித்திக் நதீர் மேலும் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment