இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தின நிகழ்வுகள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் காத்தான்குடி பீச்வே ஹோட்டல் முன்றலில் இடம்பெற்றது.
NFGGயின் காத்தான்குடி தலைமைத்துவ ஆலோசனை சபை உறுப்பினர் ஜனாப்.SMM.பஷீர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு
காலை 7.30மணிக்கு தேசியக்கொடி ஏற்றி வைத்தலுடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் NFGGயின் நகரசபை உறுப்பினர்களான சகோதரி ஜெம்ஹுத் நிஸா மசூத், சகோதரி ஆயிஷா பைசர், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சகோ. ஷியாட், முன்னாள் நகர சபை உறுப்பினர் சகோ. இர்ஷாத் ஹாஜியார், கட்சியின் உப பொருளாளர் சகோ.முஹ்ஸின், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். கட்சியின் பொதுச்செயலாளரும் நகரசபை உறுப்பினருமாகிய ALM.சபீல் நளீமி அவர்கள் சிறப்புரை ஒன்றை ஆற்றினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment