சம்மாந்துறை வலய நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் இ.க.நி.சேவை தரம் 1ற்கு அமீர் பதவிஉயர்வு!



வி.ரி.சகாதேவராஜா-
ம்மாந்துறை வலய நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர் இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாந்தரத்திற்கு பதவியுயர்வுபெற்றுள்ளார்.

மருதமுனையைச் சேர்ந்த ஜனாப் அமீர் 1984.12.27ஆம் திகதி ஆரம்பக்கல்வி ஆசிரியராக நியமனம்பெற்று, அனுராதபுரத்தில் முதல் சேவையை ஆரம்பித்தார். தொடர்ந்து மருதமுனை ஷம்ஸ் மத்தியகல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார்.

2007இல் இலங்கை கல்வி நிருவாகசேவைப்பரீட்சையில் சித்தியடைந்து நிருவாகசேவை அதிகாரியாக கல்முனை, மட்டு.மத்தி வலயம் ஆகியவற்றில் கடமையாற்றி இறுதியாக சம்மாந்துறை வலயத்தில் பணியாற்றிவருகிறார்.

37வருடகால கல்விச்சேவையாற்றிய அவருக்கு, அரசசேவை ஆணைக்குழு 2019இலிருந்து முதலாந்தர கல்விநிருவாகசேவை அதிகாரியாக பதவியுயர்வை வழங்கியுள்ளது.

அரச சேவை ஆணைக்குழுவின் 2021.03.22 ஆம் திகதிய தீர்மானத்தின்படி இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் வகுப்புக்கு பதவி உயர்வு பெற்ற சம்மாந்துறை கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்)ஆக கடமையாற்றும் அமீர் அவர்களுக்கு சம்மாந்துறை வலய அதிபர் சங்கம் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக அதிபர் சங்க செயலாளர் யு.கே.நிஹால் குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :