சிறுதேன்கல் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கழுத்துப்பட்டிகள் வழங்கிவைப்பு



எஸ்.சிவக்குமரன்-
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மட்/ககு சிறுதேன்கல் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில்
கல்விகற்கும் மிகவும் வறிய நிலையிலுள்ள நூறு மாணவர்களுக்கு கழுத்துப்பட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

ஜெர்மனி, ஸ்ருட்காட்டை தளமாகக்கொண்ட "உறவுகளுக்கு கரம்கொடுப்போம்" அமைப்பின் நிதியுதவியில், அவ்வமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர் சு.சியாந் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்களோடு கிரான் பிரதேச செயலாளர் சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்களும் கலந்துகொண்டு கழுத்துப்பட்டிகளை மாணவர்களுக்கு அணிவித்தனர்.

ஜெர்மனியின் ஸ்ருட்காட்டை தளமாகக்கொண்டு செயற்பட்டுவரும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பினரால் மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகளிலும் வறிய மாவணர்களுக்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :