சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலக ஏற்பாட்டில் சந்தை கண்காட்சியும் விற்பனையும்



எம்.ஏ..முகமட்-
ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோமலை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த பெண்கள் சார்ந்த சுய தொழில் முயற்சி "சந்தை கண்காட்சியும், விற்பனையும் இன்று (03) காலை 9.00 மணிக்கு திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில்
கிழக்கு ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத், மற்றும் திருகோணமலை மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நுவான் கபில அத்துக்கோரள , மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் திருமதி ,ஆரியவதி கலப்பதி ஆகியோர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இவற்றில் வீடுகளில் கையால் செய்யப்பட்ட பொருட்கள், நஞ்சற்ற பொருட்கள், மற்றும் ஏனைய உற்பத்திப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு, பொருட்களை மலிவு விலையில் விற்கப்பட்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இநனை சமூக சேவைத் திணைக்களம் மற்றும் அரசாங்க அதிபர் காரியாலயம் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு என்பன ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :