கனடாவிலிருந்து தாயக உறவுகளுக்கு கல்வி உதவி!



வி.ரி.சகாதேவராஜா-
லங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடா நாட்டில்வாழுவோர் தாம்பிறந்த தாயகத்திற்காக அவ்வப்போது பல உதவிகளை நல்கிவருகின்றனர்.

அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் வித்தியாய மாணவர்களுக்கு கற்றலுபகரணங்களை கனடாவாழ் பேரின்பமூர்த்தி தம்பதிகள் வழங்கியுளளனர்.

மாவட்டத்தின் சமுகசேவையாளர் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறிலினூடாக இவ்வுதவிகள் நேற்று பாடசாலை மாணவர்க்கு வழங்கிவைக்கப்பட்டன.
யாழ்.மண்ணைச்சேர்ந்த திரு போன்பமூர்த்தி தம்பதியினரின் புதல்வன் கிருஷேந்திரா 18வயதில் மரணித்து நேற்றுடன் 12வருடங்களாகின்றன. அதனையொட்டி பல்வேறு உதவிகளை தாயகத்தில் தவிசாளர் ஜெயசிறிலினூடாக நேற்று மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட பின்தங்கிய பாடசாலை இதுவாகும். வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அலுவலுகம் சார்பில் கலந்துகொண்டார்.
அம்மாணவர்க்கு காலையில் ஆரோக்யாவின் இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :