கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட கந்தளாய் நகரில் கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசம்.



 எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட கந்தளாய் நகரில் இரவு வேளைகளில் கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசம் காரணமாக வீதி விபத்துக்களும்,வாகன நெரிசல்களும் ஏற்பட்டு வருகின்றது.
கந்தளாய் நகரிலுள்ள புகையிரத கடவைகளில் பத்திற்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் தினமும் இரவு வேளைகளில் உலாவி வருகின்றது.

அத்தோடு இம்மாடுகள் வீதிகளிலும் மலம் கழித்து அசுத்தப்படுத்தியும் வருகின்றது.
இதனால் வாகனங்களில் செல்வோர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இரவு வேளைகளில் வாகனத்தில் வேகமாக செல்வோர் வீதியில் படுத்துரங்கும் மாடுகளுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.

எனவே வீதிகளில் படுத்துரங்கும் கட்டாக்காலி மாட்டு உரிமையாளர்களுக்கெதிரான கந்தளாய் பிரதேச சபை சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :