கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்தலும் மர நடுகையும்.



றிஸான் றாசீக்-
கௌரவ விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நாமல் ராஜபக்ஷ அவர்களின் உடைய கருவில் நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்வோம் எனும் நிகழ்வு நாடு பூராக என்று காலை 7 மணியளவில் நடை பெறவுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேசத்திலும் இச்செயல்திட்டத்தை இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்களின் மூலம் அமுல்படுத்தும் முகமாக அட்டாளைச்சேனை பீச் கெஸ்ட் ஹவுஸ் முன்பாக கடற்கரையை சுத்தம் செய்யப்பட்டு மரநடுகையும் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அமைச்சர் சரத் வீரசேகரின் இணைப்பாளரும் ஊடகவியலாளருமான றிஸாட், WD வீரசிங்கவின் இணைப்பாளரும் ஆசிரியருமான ஜெஸீல் , அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்கள் சேவைகள் அதிகாரி, ALM.றனீஸ் Mso M.றியாத், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சர்பான் , இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சீத் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் தன்னார்வ தொண்டர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :