அந்த வகையில் எமது கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை ஶ்ரீ சுபட்ரராம மகா விகாரைக்கு மிகவும் தேவைப்பாடாகவும் இன ஐக்கியத்திற்கு உந்துகோளாகவும் காணப்பட்ட குடிநீர் பிரச்சினையினை கண்டறிய கடந்த இரண்டு வாரத்திற்கு முன் கல்முனை மாநகரசபை பிரதிமேயர் ரஹ்மத் மன்சூர் கல்முனை ஶ்ரீ சுபட்ரராம மகாவிகாரைக்குச் சென்று அங்குள்ள களநிலவரத்தை விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்க ரத்ன தேரரிடம் அறிந்து கொண்டார்.
அதன் பின் கல்முனை மாநகரசபை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் அங்கு தேவைப்பாடாக காணப்பட்ட பொதுக்கிணற்றினை உடனடியாக அடுத்த இரண்டு வாரத்திற்குள் பூர்த்தி செய்து தருவதாக வாக்குறுதியளித்து சொன்னதைப்போல் இரண்டு வாரத்திற்குள் அக்குறைபாட்டினை நிவர்த்தி செய்து வைத்துள்ளார்.
அத்துடன் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்க ரத்ன தேரர் அவ்விடத்தில் உரையாற்றும் போது தான் இந்த விகாரையில் பல வருடங்கள் இருந்து வருவதாகவும் இப்படியான ஒரு வேலைத்திட்டத்தை யாரும் செய்யவில்லை எனவும் இன்று கல்முனை மாநகரசபை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் செய்த சேவையானது தற்போதய நாட்டின் சூழ்நிலையில் முழு இலங்கைக்கும் முன்னுதாரணமான செயற்பாடாகவே இது அமைந்துள்ளது எனவும் இதற்காக விஷேட நன்றியினையும் விகாராதிபதி தனது உரையில் தெரிவித்தார்.
இப்பொதுக் கிணற்றினை வழங்கி வைக்கும் வேலைத்திட்டத்தினை YWMA அமைப்பினரின் பூரண அணுசரணையிலும் ரஹ்மத் சமூக சேவை அமைப்பினரின் நேரடி கண்காணிப்பிலும் இவ்விகாரைக்கான குடிநீர் பிரச்சினை நிவர்த்தி செய்து வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் உயர்நிலை உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment