பரிசுப்பொதி- SMS தகவல் குறித்து மக்களுக்கு வந்த எச்சரிக்கை..

J.f.காமிலா பேகம்-

ரிசுப் பொதிகளை வழங்குவதாகக் கூறி, கையடக்கத் தொலைபேசிகளுக்கு கிடைக்கப் பெறும் குறுந்தகவல்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு, இலங்கை தகவல் தொடர்பாடல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, இது தொடர்பில் தமக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தகவல் தொடர்பாடல் நிறுவனததின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான போலி செய்திகளின் ஊடாக மக்களின் முக்கியமான தரவுகள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகள் ஊடுருவப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான போலி இணைப்புகளின் ஊடாக, தனிப்பட்ட தரவுகளை திருடும் வகையில், மென்பொருள்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தொலைபேசிகளுக்கு கிடைக்கப் பெறும் போலியான குறுந்தகவல்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு, இலங்கை தகவல் தொடர்பாடல் நிறுவனம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :