கோவிட் 19 மூன்றாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பம்.

ஏறாவூர் சாதிக் அகமட்-

 கோவிட் 19 மூன்றாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவின் 17 கிராம சேவகப்பிரிவுகளிலும் சமுர்த்திப் பயனாளிகள் , காத்திருப்போர் பட்டியல் (சமுர்த்தி பெறத் தகுதியான குடும்பங்கள்)மற்றும் முதியோர் கொடுப்பணவு பெறுகிறது.

 அங்கத்தவர்கள், சிறுநீரகங்கள்பாதிக்கப் பட்டவர்கள் போன்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 5000/- கொடுப்பணவு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்களின் வழி நடாத்தலின் கீழ் சமுர்த்தி வங்கிச்சங்க முகாமைத்துவ பணிப்பாளர் SAM பஷீர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இக்கொடுப்ணவுகள் சமூர்தி உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

 இந் நிகழ்வுகளில் உதவிப் பிரதேச செயலாளர் AC அஹமட் அப்கர் அவர்களும் கலந்துகொண்டுள்ளதுடன் இதுவரை 4731 பயனாளிகளுக்கு 236,55000/= வழங்கப்பட்டுள்ளதுடன் கொடுப்பணவுகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :