டிவிசன் உதைபந்தாட்ட தொடரில் கல்முனை சனிமெளண்ட் விளையாட்டு கழகம் 5-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

ம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக் ஒழுங்கு செய்திருந்த ஏ டிவிசன் உதைபந்தாட்ட தொடரில் கல்முனை சனிமெளண்ட் விளையாட்டு கழகத்திற்கும் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழகத்திற்கும் இடையிலான நொக் அவுட் முறையிலான போட்டி கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில்  புதன்கிழமை (7) இடம்பெற்றது.

இப்போட்டியில் கல்முனை சனிமெளண்ட் விளையாட்டு கழகம் 5-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை சனிமெளண்ட் விளையாட்டு கழகத்தின் சார்பில் ஏ.டபிள்யூ.எம்.றிபாஸ் 2 கோல்களையும் , ஏ.ஆர்.எம்.பிரோஸ் , ஏ.எஸ்.எம்.சஜீன் ஆகியோர் தலா ஒரு கோலையும் புகுத்தி கழகத்தின் வெற்றிக்கு வழியமைத்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :