கொவிட் 19 மற்றும் டெங்கு பாதுகாப்பு தொடர்பான உள்ளக அவசரக் கூட்டமொன்று நேற்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா பஷீர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகு பொது சுகாதார பரிசோதகர் நுளம்பு தடுப்பு பிரிவினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இனிவரும் காலங்களில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவற்றில் சில வருமாறு
முக கவசம் அணிந்து செல்லுங்கள் சமூக இடைவெளியை பேணி நடந்து கொள்ளுங்கள். தேவையில்லாமல் ஒன்றுகூடலை தவிர்த்துக் கொள்ளுங்கள்.( சன நெரிசலான இடங்களைத் தவிர்ப்போம்)
இளையோர் முதியோர் உட்பட சிறு குழந்தைகளைக் கூட எந்த நோய் தொற்றக் கூடிய சூழல் உள்ளதால் முடிந்தவரை அவசர நிலைகளைத் தவிர வீட்டிலிருந்து வெளியேறுவது மட்டுப்படுத்தப்படல் வேண்டும்.
ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கிராமிய குழுக்களை அந்தந்த பிரிவில் கொவிட் 19 டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தல்.
முகக்கவசமின்றி வீதியில் நடமாடுபவர்கள் இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுத்தல். சந்தை வியாபாரிகள் வியாபார நேரத்தில் சுகாதார நடைமுறைகளை பேணுவதோடு முகக்கவசம் அணிந்திருத்தலும் அதனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்காணித்தலும் ஊக்குவித்தலும்.
பள்ளிவாசல்களில் கொவிட் 19 டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்து தினமும் ஒரு வேளை ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்தல்.
0 comments :
Post a Comment