கொரோனாவால் கல்முனை காணிப்பதிவகம் மூடப்பட்டது!



காரைதீவு சகா-
காணிப்பதிவகத்தின் கல்முனை மாவட்ட பதிவக காரியாலயம் 14 நாட்கள் மூடப்பட்டுள்ளது.
அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 28. 04. 2021 முதல் எதிர்வரும் 11. 05. 2021 வரை அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
கல்முனை காணிப்பதிவகத்தில் பணியாற்றிய 25 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அந்த பணியகத்திற்கு கடந்த இரு வாரங்களுக்குள் சென்றவர்கள் சுயமாகவே தனிமைப்பட்டு கொள்ளுங்கள்.தங்கள் பகுதி பொதுச் சுகாதார உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளுங்கள் என கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :