நடிகர் சரத் குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை விசேட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
காசோலை மோசடி விவகாரம் தொடர்பிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
”இது என்ன மாயம்” திரைப்படத்திற்காக ராடியன்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகை திருப்பி செலுத்தாததை அடுத்தே, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், சிறைத் தண்டனையை இடைநிறுத்தி வைக்குமாறு சரத் குமார் மற்றும் ராதிகா ஆகியோர் மனுவொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணைகள் இன்றைய தினமே எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment