46 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு கிழக்கு மாகாண ரீதியாக உதைப்பந்தாட்டப் போட்டித் தொடர் இடம் பெற்றது. இதில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை ,மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்குபற்றிய நிலைமில் இறுதிப் போட்டியில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட கிண்ணியா நோவா அணியினர்மாகாண சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.இறுதிப் போட்டியானது கந்தளாய் லீலரத்ன பொது விளையாட்டு மைதானத்தில் (05) இடம் பெற்றது. அம்பாறை அணியினருடன் நோவா அணியினர் ஒன்றுக்கொன்று எதிர்த்தாடிய நிலையில் 5:0 என்ற கோள் கணக்கில் முதல் சுற்றில் வெற்றியடைந்து இறுதிச் சுற்றுக்கு சென்றிருந்தனர் இறுதிச் சுற்றில் மட்டக்களப்பு அணியினருடன் எதிர்த்தாடி 3:1 என்ற கோள் கணக்கில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட கிண்ணியா நோவா அணியினர் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டனர்.
போட்டியில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன. இதில் கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
0 comments :
Post a Comment