சிராஜ் விளையாட்டுக் கழக A அணியினர் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தனர்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற SPL _ session 3 கிரிக்கெட் மென்பந்து இறுதிப் போட்டி சிராஜ் நகர் பாடசாலை மைதானத்தில் (02)நடைபெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் இயங்கி வரும் சிராஜ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் குறித்த போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

அணிக்கு 11 பேர்கொண்ட மென்பந்து சுற்றுப் போட்டியில் மொத்தமாக ஐந்து அணிகள் பங்குபற்றின.
இவ்விறுதிப் போட்டியில் சிராஜ் B மற்றும் சிராஜ் A ஆகிய அணிகள் ஒன்றையொன்று எதிர்த்தாடின..
இப்போட்டியில் சிராஜ் விளையாட்டு கழக A அணியினர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று; வெற்றிக் கிண்ணத்தையும் தன்வசப்படுத்திக் கொண்டனர் .

வெற்றியீட்டிய அணியினருக்கு கேடயங்களும் இதன் போது வழங்கப்பட்டன. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :