சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு !



நூருல் ஹுதா உமர்-
ட்டாரில் இயங்கி வரும் கட்டார் சாய்ந்தமருது மாளிகைக்காடு சமூகம் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 மாணவர்களுக்கு ஒரு தொகை கற்றல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இக் கற்றல் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (08) அல்-ஜலால் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். ஸைபுதீனின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கட்டார் சாய்ந்தமருது மாளிகைக்காடு சமூகத்தின் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு செயற்குழுவின் உறுப்பினர்களான ஆர்.எம்.தானீஸ் மற்றும் ஏ.ரோஷன் அக்தர் ஆகியோர் கலந்து கொண்டு இக் கற்றல் உபகரணங்களை அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம். ஸைபுதீன், உப அதிபர் டி.கே.எம்.சிராஜ் மற்றும் ஆசிரியர்களான ஏ.ஷியாம், ஐ.அஸ்லம் ஸுஜா ஆகியோர் முன்னிலையில் அம் மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :