அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய தலைவராக மருதமுனையைச் சேர்ந்த கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்


றாசிக் நபாயிஸ், மருதமுனை -
ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்
சம்மேளனத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் (13/04/2021)
இன்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது வெலிவோறியன் கிராமத்திலுள்ள எம்.எஸ் காரியப்பர் வித்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் கலாபூசணம் மீரா.எஸ். இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது புதிய நிர்வாகக் குழுவில் மருதமுனையைச் சேர்ந்த கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் தலைவராகவும், சம்மாந்துறையைச் சேர்ந்த
ஏ.ஜே.எம்.கனிபா
செயலாளராகவும், கல்முனையைச் சேர்ந்த
யூ.எல்.எம்.இஸ்ஹாக்
பொருளாளராகவும், சிரேஷ்ட ஆலோசகர்களாக கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன், கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் எம்.எல்.எம்.ஜமால்டீன் என
முன்னைய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உட்பட அனைவரும் ஏகமானதாக முன்னைய தலைவரின் தத்துணிவுக்கு கட்டுப்பட்டு அனைவரின் சம்மதத்துடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன் போது ஊடகவியலாளர்களான
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ மஜீத், எஸ்.கார்த்திகேசு மற்றும் பி.முகாஜரீன் போன்றோர்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர்களால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :