ஒட்டமாவடி தபால் நிலையம்; இன்றும் நாளை மதியம் 1.00 மணிவரை முதியோர் கொடுப்பணவு மற்றும் பொதுசன மாதாந்த உதவி கொடுப்பணவுகளை வழங்குவதற்காக திறந்திருக்கும்



எஸ்.எம்.எம்.முர்ஷித்- 
கொரோனா தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரயானத்தடை காரணமாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் முதியோர் கொடுப்பணவு மற்றும் பொதுசன மாதாந்த உதவி கொடுப்பணவுகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளைசனிக்கிழமைகளில் பெற்றுக் கொள்ளமாறு ஒட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒட்டமாவடி தபால் நிலையம் நாளை வெள்ளிக்கிழமை (28.05.2021) மற்றும் சனிக்கிழமை (29.05.2021) மதியம் 1.00 மணிவரை திறந்திருக்கும் என்பதனால் இதுவரை பொதுசன மாதாந்த உதவி கொடுப்பணவு (PAMA) மற்றும் முதியோர் கொடுப்பணவுகளை பெறாதவர்களது உதவி தொகைகளை பெற்றுக் கொள்வதற்கு சம்மந்தப்பட்டவர்களின் உறவினர்கள் உதவுமாறும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே நாட்டிலும் எமது பிரதேசத்திலும் கொரோனா தாக்கம் காணப்படும் நிலையில் சுகாதார விதிமுறைகளை பேணியவாறு தபால் நிலையத்திற்கு சென்று தங்களுக்கான கொடுப்பணவுகளை பெற்றக்கொள்ளுமாறும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :