யாழில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 21 பேருக்கு கொரோனா தொற்று!..

J.f.காமிலா பேகம்-

யாழ்ப்பாணம்- தையிட்டி பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறி இரகசிய முறையில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 21பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட தையிட்டி பகுதியில் இந்த திருமண நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அறிந்த சுகாதார பிரிவினர், திருமண நிகழ்வில் பங்குப்பற்றி இருந்த மணமக்கள் குடும்பம் உள்ளிட்ட ஏனைய சிலரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தினர்.

அதில் சிலருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :