மட்டக்களப்பில் சைக்கிள் விபத்து! 22 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலி



ஏறாவூர் நிருபர் -நாஸர்-
ட்டக்களப்பு- மரப்பாலம் பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 22 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
நேற்றிரவு 11.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு குழந்தையின் தந்தையான பீ. விஜிதரன் என்பவரே பலியானவரென அடையாளங்காணப்பட்டுள்ளது.
கித்துள் பகுதியிலுள்ள தனது தாயின் வீட்டிலிருந்து மரப்பாலம் பிரதேசத்திலுள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது எருமை மாடு வீதியைக்குறுக்கிட்டவேளை மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மாட்டுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதுடன் மாடு அவ்விடத்திலேயே இறந்துள்ளது.
இவரது சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :