கிண்ணியா பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைய கொரோனாவினால் தனிமைப் படுத்தப் பட்ட பொதுமக்களுக்கு 5 ஆயிரம் பெறுமதியான உணவுப் பொதி வழங்குவது சம்மந்தமான கூட்டம் றகுமானியா நகர் கிராம அலுவலகத்தில் இன்று (19) அப் பிரிவு கிராம உத்தியோகத்தர் ஏ.சி.அப்துல் பரீட் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கிராம அபிவிருத்தி சங்கம்,மீனவ சங்கம் மற்றும் விளையாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட கொரோனா குழு அமைக்கப் பட்டு கண்டம் கண்டமாக உரிய நபர்களுக்கு இப் பொருட்களை வழங்குவதற்கு இக் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.
இக்கூட்டத்தில் கிண்ணியா பிரேதச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோத்தர் எம்.எஸ்.சமீமா,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோத்தர் கே.எம்.உவைஸ்,றகுமானியா கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ஏ.நௌபர். றகுமானியா மீனவ சங்கத்தின் செயலாளர் ரீ.எல் .நளீம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment