இம்முறை வெளியான க.பொ.த.உயர் தரப் பரீட்சை பெறுபேற்றின் படி ஓட்டமாவடி தேசிய பாடசாலையிலிருந்து 67 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
இதில், 2 மாணவர்கள் வைத்தியத் துறைக்கும் 3 மாணவர்கள் பொறியியல் துறைக்கும் 5 மாணவர்கள் வணிகத் துறைக்கும் 11 மாணவர்கள் தொழிநுட்ப துறைக்கும் 2 மாணவர்கள் கலைத் துறைக்கும் ஏனையோர் வெவ்வேறு துறைகளை கற்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எமது பாடசாலையில் கல்வி கற்று இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment