இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது சுகாதார சேவை பணியாளரது மரணம் கண்டி பேராதனையில் பதிவாகியிருக்கின்றது.
பேராதனை போதனா மருத்துவமனையின் சுகாதார பணியாளரான 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு நேற்று உயிரிழந்திருக்கின்றார்.
கண்டி – தலாத்துஓயாவைச் சேர்ந்த இந்தப் பெண் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளை கொண்டிருந்த நிலையில் 21ஆம் திகதி பி.சி.ஆர் செய்யப்பட்டபோது தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே அவர் நேற்று உயிரிழந்திருக்கின்றார். கண்டி மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கராப்பிட்டிய, திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளில் கர்ப்பிணிப் பெண்கள் இருவருக்கும், ராகம வைத்தியசாலையில் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
இவ்வாறு தொற்றுக்கு இலக்கான கர்ப்பிணிப் பெண்கள் அந்தந்த வைத்தியசாலைகளில் தாதிப் பெண்களாகக் கடமையாற்றுகிறவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment